Monday, September 17, 2012

சவூதியில் பஸ்- லொறி மோதி தீப்பிடித்தது: இந்தியர்கள் உள்பட 35 பேர் பலி


துபாயின் ஜூபைல் மாகாணத்தில் இன்று பேருந்தும்,ஆயில் டேங்கர் லாரியும் நேருக்குநேர் மோதி தீப்பிடித்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த சுமார் 35 பேர் இறந்தனர்.


சவூதியில் கேரளாவைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான நாசல் அல் ஹாஜிரி என்ற நிறுவனம் உள்ளது. இங்கு இந்தியாநேபாளம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் சென்று வர கம்பெனி சார்பில் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இன்று பணி முடிந்து தொழிலாளர்கள் அந்த பேருந்தில் வீடு திரும்பினர். ஜூபைல் நகருக்கு அருகில் சென்றபோது  அந்த பேருந்துஆயில் டேங்கர் லாரியில் மோதியது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீப்பிடித்தன. பேருந்தில் இருந்த தொழிலாளர்கள் பலர் தீயில் கருகினர்.


இவர்களில் 10 இந்தியர்கள் உள்பட 35 பேர் உடல் கருகி இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும்12 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets