ஜோசப் காரே மெரிக், 1862 ஆம் ஆண்டு தொடக்கம் 1890 ஆம் ஆண்டுவரை வாழ்த ஒரு அபூர்வமனிதர்!
அவரைப்பற்றிய சில சுவார்ஷ்யமான தகவல்களையே இன்று தமிழ்குளோனில் பார்க்கப்போகிறீர்கள்.
இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் பிறந்த மெரிக் பிறந்து சில வருடங்களிலேயே அசாதரண மனிதனாக உருவாகத்தொடங்கினார். அவரின் தோல் யானை போன்று தடிமனாகத்தொடங்கியதுடன் முடிச்சுக்களும் உருவாகத்தொடங்கியது. மேலும் மருத்துவ உலகிற்கு சவால் விடும் விதமாக அவரின் நெற்றியில் பாரிய எலும்பு வளரத்ட்தொடங்கியதுடன் அவரின் கால்களும் வழமைக்கு மாறாக வித்தியாசமாக வளர்ந்தது.
அதன் விளைவு, நடக்கும் போது விழுந்த அவரின் இடுப்பெலும்பு நிரந்தரமாக வழைந்துபோனது.
இவ்வாறாக வழமைக்கு மாறாக வழர்ந்த மெரிக்கின் 11 வயதில் அவரின் தாயார் மரணமடைந்தார். அதன் பின் அவரின் தந்தை மறுமணம் செய்துகொள்ள, தந்தையாலும் புதிய தாயாலும் ஒதுக்கப்பட்டார். 12 வயதில் பாடசாலையால் விலக்கப்பட்ட அவர் 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார்.
வேலைகளைப்பெற்றுக்கொள்வதில் உருவத்தால் பல தடங்களை சந்தித்த அவர் இறுதியாக இலண்டன் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவரின் உதவியுடன் தங்கவைக்கப்பட்டார். இவரின் வினோத உடலமைப்பை பற்றி அறிந்த லண்டன் மகாராணியின் கவணம் அவர் பக்கம் திரும்ப அவரின் வாழ்வு பொருளாதார ரீதியில் வளம்பெற்றது.
இறுதியாக படுக்கையில் இருக்கும் போதே கழுத்து முறிந்து இறந்துபோனார். இன்றுவரை இவரின் இவ் எதிர்பாரா உடலமைப்பிற்கான காரணமும் அவரின் இறப்பிற்கான சரியான காரணமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தலையில் வழர்ந்த பாரிய எலும்புக்கட்டியால் ஏற்பட்ட பாரத்தின் காரணமாக, திடீரென தூக்கத்தால் விளித்தெழும் போது இறந்திருப்பார் என ஊகிக்கப்படுகிறது. ( இது போன்ற விசேட மனிதர்களை பற்றி அறிந்து கொள்ள கிங்டொம் ஆஃப் கீழக்கரையுடன் இணைந்திருங்கள். )
|
Monday, March 12, 2012
இனங்கான முடியாத டிசோடருள்ள ஆச்சரியமான மனிதர்! - (வீடியோ+ படங்கள் + விளக்கம்)
Sunday, March 11, 2012
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க சிப்பாயின் வெறிச்செயல் Read more about ஆப்கானிஸ்தானில் அமெரிக்க சிப்பாயின் வெறிச்செயல்
ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹார் மாகாணத்தில் இன்று ( 11.03.2012) காலையில் இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு வீடாகப் புகுந்து சராமாரியாக அந்த சிப்பாய் சுட்டதில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் குழந்தைகள் ஆவர்.
படுகொலையை நடத்திய சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் என அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவத்தினை கண்டித்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் லியோன் பனெட்டா, தான் வேதனையடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ மையத்தில் குர்ஆன் எரிக்கப்பட்டதை தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது. அமெரிக்க ராணுவத்திற்கும் ஆப்கான் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலை நிலவுகிறது